ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.12.23
ஆக்கம் -126
கலவரம்

உலக வாழ் உயிரினமதில்
பல்வேறு கோலமுடன் ஊதிக்
கரைக்கப்படும் கலவரம்

காலங்காலமாய் கலகமிடும்
தமிழ் ,சிங்கள ,முஸ்லீமில்
சிதைக்கப்படும் போராட்டம்

அங்குமிங்கும் எங்கும் பதவி
ஏங்கும் ஆட்சி நாற்காலியில்
நிரந்தரத் தளர்வாட்டம்

பொங்கிப் பொங்கி எழுந்து
போட்டியிடும் மதவாதிகள்
கண்ட இடமெலாம் குண்டு
வெடிப்பு வெறியாட்டம்

என்னவொரு வேதனை
ஏனிந்தப் பெரு சாதனை
மனமோடு ஆராதனை
காணுமிந்தக் கலவரமே .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading