இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.12.23
ஆக்கம் -294
மனிதத்தின் நேயமே

மனிதத்தின் நேயம் மறைந்து
மாயமாய்ப் போனதே
இனத்துக்குள் இருந்த சம
ஒற்றுமை குலைந்து விட்டதே

அன்பு,ஆதரவு,கனிவு தேய்ந்து
ஆணவ அதிகாரம் கொட்டுதே
கத்தி,கோடரி,ஆயுதம் பாய்ந்து
உதிரம் கொப்பளித்துச் சீறுதே

சமத்துவம் சாமத்தியமோடு சுய
நலமாய்த் தப்பித்துக் கொண்டதே
தலைவிரித்தாடும் போதை சூழ
மனித உரிமை எது ?எனக் கேட்டதே

கருத்து சுதந்திரங்கள் காணாமல்
போயிட பெருத்த அரசின் ஆட்சியில்
போட்ட சட்டம் ,நீதி மனித உரிமை
இன்றி மீறி மீறிப் போனதே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading