28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
07.12.23
ஆக்கம் -294
மனிதத்தின் நேயமே
மனிதத்தின் நேயம் மறைந்து
மாயமாய்ப் போனதே
இனத்துக்குள் இருந்த சம
ஒற்றுமை குலைந்து விட்டதே
அன்பு,ஆதரவு,கனிவு தேய்ந்து
ஆணவ அதிகாரம் கொட்டுதே
கத்தி,கோடரி,ஆயுதம் பாய்ந்து
உதிரம் கொப்பளித்துச் சீறுதே
சமத்துவம் சாமத்தியமோடு சுய
நலமாய்த் தப்பித்துக் கொண்டதே
தலைவிரித்தாடும் போதை சூழ
மனித உரிமை எது ?எனக் கேட்டதே
கருத்து சுதந்திரங்கள் காணாமல்
போயிட பெருத்த அரசின் ஆட்சியில்
போட்ட சட்டம் ,நீதி மனித உரிமை
இன்றி மீறி மீறிப் போனதே .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.