” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.12.23
ஆக்கம் -128
நிலாவில் உலா

மகிழ்வின் ஒளியில்
நீள்வான வெளியில்
பரந்திடும் பொழுது
பெருமையின் பூரிப்பு

பால் நிலவில் பாக்கு
உரலிடிக்கும் பாட்டி
கண்டு நிலாச்சோறு
உண்ட பாலர் பிடிப்பு

உருண்டு தவண்ட
நிலாவில் உலாவின்
ஊர்கோலமதில் கண்
சிமிட்டிய விண்மீனின் துடிப்பு

காதலிட்ட புன்னகை தான்
மூன்றாம் பிறையோ ?
மோதலிட்ட கன்னக்குழி
முக மலர்வோ ?

பந்தலிட்ட அழகில்
வெட்கமிட்ட நாணமோ
தலைகுனிய நாலாம்
பிறையாய் நலிந்து
மறைந்த பரிதவிப்பு .

Nada Mohan
Author: Nada Mohan