ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.2024
கவி இலக்கம் -301
கைக்குள் கையாய்

மெய்க்குள் தோய்ந்த பொய்
உணர்வுகள் ஊடுருவி ஒரு
கைக்குள் கையாய் பையில்
அடங்கா கைத் தொலைபேசி

முடங்கும் நேரந் தெரியாது
தொடங்கும் பொய்கள்
தொய்வின்றி அல்லும் பகலும்
உரையாடும் தொல்லைபேசி

யார் யாரோ முகந்தெரியா
உறவுகள் போர்வையாக்கி
உரையாடல் ஊடலாகிப்
பெரும் பாடாய்ப் போர்
தொடுத்தது

முக்கிய தேவை மறந்து
மூக்கை நுழைத்த பதிவு
கோர்வையாக்கிப் பாதை
தெரியாது போகுமிடம் புரியா
தேவையற்றவை இழுத்துத்
தலையிடி ஆனது .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading