இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.02.24
ஆக்கம் -135
பங்கு நீ

அவனியில் பங்குனியாய்ப்
பவனி வருவதில் பாங்கு நீ
தரணியில் தாவித் தாவி
பூரணியாவதில் பங்கு நீ

தங்கு தடையின்றி அங்கும்
இங்கும் எங்கெங்கும் விரதம்
பௌர்ணமியில் மனம் குளிர
சொந்த சோகம் தாங்கும் நீ

ஆனந்தத் திங்கள் ,பங்குனி
உத்தரப் பேரானந்த உற்சவ
ஊரானந்தமதில் திருமணக்
கொண்டாட்டப் பங்கு நீ

குருத்து ஞாயிறும் கூட வரும்
வருத்தும் குளிரும் கூடி வரும்
கொழுத்த வெயில் குட்ட வரும்
அழுத்திய மனதின் பங்கு நீ .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading