” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.02.24
ஆக்கம் -135
பங்கு நீ

அவனியில் பங்குனியாய்ப்
பவனி வருவதில் பாங்கு நீ
தரணியில் தாவித் தாவி
பூரணியாவதில் பங்கு நீ

தங்கு தடையின்றி அங்கும்
இங்கும் எங்கெங்கும் விரதம்
பௌர்ணமியில் மனம் குளிர
சொந்த சோகம் தாங்கும் நீ

ஆனந்தத் திங்கள் ,பங்குனி
உத்தரப் பேரானந்த உற்சவ
ஊரானந்தமதில் திருமணக்
கொண்டாட்டப் பங்கு நீ

குருத்து ஞாயிறும் கூட வரும்
வருத்தும் குளிரும் கூடி வரும்
கொழுத்த வெயில் குட்ட வரும்
அழுத்திய மனதின் பங்கு நீ .

Nada Mohan
Author: Nada Mohan