ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.03.2023
ஆக்கம்-96
நீர்க்குமிழி

விண்ணிலிருந்து மண்ணிற்கு
மழைத்துளி எனும் பெயரோடு
வீரீயத்துடன் விரைந்து வந்ததே
நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும் இருந்த இடம்
தெரியாது கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார
நுரையில் பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக் காற்றோடு
கலந்து பறந்து போனதே

நினைவுகள் சுமந்த கனவோடு
காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில்
பூத்த வியர்வை எனும் நீர்க்குமிழி
ஒரு நொடிப் பொழுதில் மறைந்து
போனதே

நிரந்தரமற்ற நீண்ட வாழ்வும் கூட
பரந்த உலகில் பிறந்த மனிதனில்
நீர்க்குமிழி போல மண்ணில்
மறைந்து புதைந்து போகுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading