சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.03.2023
ஆக்கம்-96
நீர்க்குமிழி

விண்ணிலிருந்து மண்ணிற்கு
மழைத்துளி எனும் பெயரோடு
வீரீயத்துடன் விரைந்து வந்ததே
நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும் இருந்த இடம்
தெரியாது கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார
நுரையில் பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக் காற்றோடு
கலந்து பறந்து போனதே

நினைவுகள் சுமந்த கனவோடு
காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில்
பூத்த வியர்வை எனும் நீர்க்குமிழி
ஒரு நொடிப் பொழுதில் மறைந்து
போனதே

நிரந்தரமற்ற நீண்ட வாழ்வும் கூட
பரந்த உலகில் பிறந்த மனிதனில்
நீர்க்குமிழி போல மண்ணில்
மறைந்து புதைந்து போகுமே.

Nada Mohan
Author: Nada Mohan