கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.05.23
ஆக்கம் -267
பரிதாபம்

தாயின் மடியில் தவண்டு
புரண்டு உருண்ட மழலை
வளர்ந்து குலம் காக்குமென
நினைத்தது நிலை குலைந்து
போனதே

சின்னஞ் சிறுசாய் இருக்கையிலே
பிஞ்சில் பழுத்தது போல
மிதமிஞ்சிய ஆசையில்
பென்னம் பெரிய களவில்
கன்னம் வைத்துக் கையோடு
பிடிபட்டதே

அந்நிய நாட்டுக் கலாச்சாரம்
தவறான நட்பு , தடுமாறும் குடி
போதையில் பாதை மாறி
நின்றதே

நொடியில் பணஞ் சேர்க்க
கூத்தாடி பற்றிக் கஞ்சாவை
விற்கவே பிடிபட்டு
சீக்கிரமாய் சிறை புகுந்து
சீரழிந்து உருக்குலைந்து
உயிர் போனதே பரிதாபமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading