இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.05.23
ஆக்கம் -267
பரிதாபம்

தாயின் மடியில் தவண்டு
புரண்டு உருண்ட மழலை
வளர்ந்து குலம் காக்குமென
நினைத்தது நிலை குலைந்து
போனதே

சின்னஞ் சிறுசாய் இருக்கையிலே
பிஞ்சில் பழுத்தது போல
மிதமிஞ்சிய ஆசையில்
பென்னம் பெரிய களவில்
கன்னம் வைத்துக் கையோடு
பிடிபட்டதே

அந்நிய நாட்டுக் கலாச்சாரம்
தவறான நட்பு , தடுமாறும் குடி
போதையில் பாதை மாறி
நின்றதே

நொடியில் பணஞ் சேர்க்க
கூத்தாடி பற்றிக் கஞ்சாவை
விற்கவே பிடிபட்டு
சீக்கிரமாய் சிறை புகுந்து
சீரழிந்து உருக்குலைந்து
உயிர் போனதே பரிதாபமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading