நீரும் நெருப்பும்

ராணி சம்பந்தர் பேரும் புகழுமிக்க உலகிலே மாந்தரும் ,பயிர் நிலங்களும் கால் நடைகளுமிருந்த இடம் தெரியா அழிந்திடும் வேகம் மண்ணிற்கு...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.03.22
கவி ஆக்கம்-219
உன்னதமே உன்னதமாய்
கன்னம் வைத்த காவலில்லா காம வெறியர்
அன்னம் கொடுத்த ஆடவர்க்கே
பொன் ,பொருள் போக்கிரியாய் அள்ளி
மானபங்கப்படுத்திய பூத கணங்கள்
மதங்கொள்ளாது நன்றியுடன் மாதரில்
உன்னதமாய் உத்தமராவாரா

கன்னம் துளைத்து சாவைச் சுக்குநூறாக்கி
சினங்கொண்டு சிக்கித் தவிக்கும் சீவாத்மா
மனம் நிறையாது மக்கி மண்ணுள் போகமுதல்
மண்ணாசை அரசியல்வாதிகள் உள்ளம் மாறி
உன்னதமாய் உன்னதமாவாரா

பென்னம் பெரிய ஆணவ ஆட்சி வெறி
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுகுண்டே-உன்
அக்கிரமம் தொலைந்து ஆட்டமடங்கி ஆணியடித்து
முத்திரை குத்தி மூக்கணாங்கயிறு தொங்கிட
உக்கிரையின் போர் தணிந்து சுடரொளி ஏற்ற
உன்னதமே உன்னதமாயிடுமா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading