ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.07.22
நிம்மதியாக உறங்காது
ஆக்கம்-65
சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம்
கன்னம் வைத்த சீனாவிடம் புகுந்து
பென்னம் பெரிய சிக்கலில் உதிர்ந்து
சன்னம் துழைக்காது சுக்குநூறாகிய
பித்துப்பிடித்த அழகிய முத்துத் தீவு

செல்லும் பாதை தெரியாது -ஒருவர்
சொல்லும் கேட்காது மல்லுக்கட்டி
பில்லைக் கட்டாது தில்லுமுல்லு

முழுதாய் நனைந்தபின் முக்காடு எதற்கு
எல்லாம் தொலைந்த சுடுகாடு
இதற்கு ஏது உறக்கம்

சிங்கள தேசம் இனி நிம்மதியாக உறங்காது
எம் இனத்துக்காகப் போராடியவர்
அன்று சொன்னது இன்றைய
வரலாறு ஆனது

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading