” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.07.22
நிம்மதியாக உறங்காது
ஆக்கம்-65
சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம்
கன்னம் வைத்த சீனாவிடம் புகுந்து
பென்னம் பெரிய சிக்கலில் உதிர்ந்து
சன்னம் துழைக்காது சுக்குநூறாகிய
பித்துப்பிடித்த அழகிய முத்துத் தீவு

செல்லும் பாதை தெரியாது -ஒருவர்
சொல்லும் கேட்காது மல்லுக்கட்டி
பில்லைக் கட்டாது தில்லுமுல்லு

முழுதாய் நனைந்தபின் முக்காடு எதற்கு
எல்லாம் தொலைந்த சுடுகாடு
இதற்கு ஏது உறக்கம்

சிங்கள தேசம் இனி நிம்மதியாக உறங்காது
எம் இனத்துக்காகப் போராடியவர்
அன்று சொன்னது இன்றைய
வரலாறு ஆனது

Nada Mohan
Author: Nada Mohan