ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.05.23
கவி இலக்கம்-101
காணி

சொந்தக் காணி சோகமானதே
சிந்திய வியர்வையில் உழைத்த
அந்தக் காணி எமக்கில்லையென
ஆனதே

சந்ததிக் காணியைச் சுரண்டி
சீக்கிரமாய் பந்தமிலா சிங்களக்
குடிமனை ஆனதே

சந்நிதியிலிருந்த சுவாமி
பாதி இராத்திரியில்
புத்தரானதே

நாணிக் கோணி நடராசர்
காணியில் கள்ளத் தோணி
ஏறிக் குந்தியதே

“காணி நிலம் வேண்டும்
பராசக்தி” எட்டயபுரப் பாரதி
பாடியதே

காணியும் நிலமும் அடிக்கடி
காணாமல் போகுது
ஏன் எட்டியும் ஒட்டியும் பாராய்
கட்டி ஆளும் பராசக்தியே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading