மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர் மாற்றத்தின் ஒளியாய்த் தங்கியே மலர்ந்திடுவாய் முற்றத்திலே சுற்றமோடு பொங்கி மகிழ்ந்திடுவாய் வற்றா ஊற்றாய்ப் புலரும் சூரியனை வரவேற்றிடவே சுற்றவரக் கோலமிட்டிட முக்கல்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.05.23
கவி இலக்கம்-101
காணி

சொந்தக் காணி சோகமானதே
சிந்திய வியர்வையில் உழைத்த
அந்தக் காணி எமக்கில்லையென
ஆனதே

சந்ததிக் காணியைச் சுரண்டி
சீக்கிரமாய் பந்தமிலா சிங்களக்
குடிமனை ஆனதே

சந்நிதியிலிருந்த சுவாமி
பாதி இராத்திரியில்
புத்தரானதே

நாணிக் கோணி நடராசர்
காணியில் கள்ளத் தோணி
ஏறிக் குந்தியதே

“காணி நிலம் வேண்டும்
பராசக்தி” எட்டயபுரப் பாரதி
பாடியதே

காணியும் நிலமும் அடிக்கடி
காணாமல் போகுது
ஏன் எட்டியும் ஒட்டியும் பாராய்
கட்டி ஆளும் பராசக்தியே .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading