ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.05.23
கவி இலக்கம்-101
காணி

சொந்தக் காணி சோகமானதே
சிந்திய வியர்வையில் உழைத்த
அந்தக் காணி எமக்கில்லையென
ஆனதே

சந்ததிக் காணியைச் சுரண்டி
சீக்கிரமாய் பந்தமிலா சிங்களக்
குடிமனை ஆனதே

சந்நிதியிலிருந்த சுவாமி
பாதி இராத்திரியில்
புத்தரானதே

நாணிக் கோணி நடராசர்
காணியில் கள்ளத் தோணி
ஏறிக் குந்தியதே

“காணி நிலம் வேண்டும்
பராசக்தி” எட்டயபுரப் பாரதி
பாடியதே

காணியும் நிலமும் அடிக்கடி
காணாமல் போகுது
ஏன் எட்டியும் ஒட்டியும் பாராய்
கட்டி ஆளும் பராசக்தியே .

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading