மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.05.23
கவி இலக்கம்-101
காணி

சொந்தக் காணி சோகமானதே
சிந்திய வியர்வையில் உழைத்த
அந்தக் காணி எமக்கில்லையென
ஆனதே

சந்ததிக் காணியைச் சுரண்டி
சீக்கிரமாய் பந்தமிலா சிங்களக்
குடிமனை ஆனதே

சந்நிதியிலிருந்த சுவாமி
பாதி இராத்திரியில்
புத்தரானதே

நாணிக் கோணி நடராசர்
காணியில் கள்ளத் தோணி
ஏறிக் குந்தியதே

“காணி நிலம் வேண்டும்
பராசக்தி” எட்டயபுரப் பாரதி
பாடியதே

காணியும் நிலமும் அடிக்கடி
காணாமல் போகுது
ஏன் எட்டியும் ஒட்டியும் பாராய்
கட்டி ஆளும் பராசக்தியே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading