ராணி சம்பந்தர்

22.10.24
ஆக்கம் 163
ஆசான்

மனம் துள்ளி ஆடுது
கனம் பண்ண பள்ளி நாடுது
தினந்தினம் எண்ணிப்
புள்ளிக் கோலம் போடுது

அள்ளித் தந்த ஆதரவு, அரவணைப்பு
சொல்லிச் சொல்லிக்
கரங் கூம்புது
நுள்ளிய காதில் புகுந்த
அறிவு இன்றும் உதவிய
ஆசான் பாதந் தொட்டு
வணங்க அருகில் இல்லை என மனம்
ததும்பி வாடுது

அன்பு,கனிவு, இரக்கம்,
பொறுமை,கடமை ,
கண்ணியம், கட்டுப்பாடு தட்டுப்பாடு
இன்றி தாய், தந்தை
போல் நல்வழி தந்தது
நன்றி கூறிட கண்ணீர்
வெதும்பி ஓடுது

கவலை ஏதுமே தெரியாது பசி யாதுமே
புரியாது எமை அறிவுச்
சிலையாக வடித்திட
உலகம் போற்றும்
அற்புத சிற்பிகள்
என்றென்றும் வணங்கும் ஆசான்களே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading