ராணி சம்பந்தர்

04.02.25
ஆக்கம் 175
மாசி

மகத்துவமான மாதம்
மாசியில் மகா மகப்
பண்டிகை அமோக
வரவேற்புக் கண்டதே

12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலர் போல
மாசி மகா மகமும்
“கும்பமேளா” எனும்
சிறப்பு பெயரானதே

தாலிப் பாக்கியம் நிலைத்திடவே
கூடிவரும் திருமணம்
தீர்க்க சுமங்கலியாய்
வாழ்த்துப் பெற்றுக்
கொண்டதே

தோஷம் மறைந்து
பாவம் போக்கிப்
பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில்
விநாயகர் வழிபடப்
பொன்னான நாட்கள்
வருவது இம் மாசி மாதத்திலே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading