” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

04.02.25
ஆக்கம் 175
மாசி

மகத்துவமான மாதம்
மாசியில் மகா மகப்
பண்டிகை அமோக
வரவேற்புக் கண்டதே

12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலர் போல
மாசி மகா மகமும்
“கும்பமேளா” எனும்
சிறப்பு பெயரானதே

தாலிப் பாக்கியம் நிலைத்திடவே
கூடிவரும் திருமணம்
தீர்க்க சுமங்கலியாய்
வாழ்த்துப் பெற்றுக்
கொண்டதே

தோஷம் மறைந்து
பாவம் போக்கிப்
பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில்
விநாயகர் வழிபடப்
பொன்னான நாட்கள்
வருவது இம் மாசி மாதத்திலே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan