” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தராணி சம்பந்தர்

09.01.24
கவி இலக்கம் 130
வசந்தத்தில் ஓர் நாள்

சந்தத்தில் வேர் சொந்தம்
பந்தத்தில் சீர் சிந்தும்
வசந்தத்தில் என் பேரோ
வசந்தராணியாகக்
குந்தும்

பாரினில் சுற்றி வரும்
இளவேனில் காலமதில்
சித்திரை வைகாசி சீதன சந்தோஷ சாதனை விஷாகம்

ஊர் கோடி ஒன்று சேர
பார் பாரெனக் கூடிட
செடி கொடி பூ பூத்துப்
பாவையரில் பின்னிடும்

கொழுத்தி எரியும் வெயில்
விழுத்தித் திரியும் சாயல்
குழுத்தி பரிமாறும்
கோயில்
வயிறாற உண்ட பெருநாள்
வசந்தத்தில் ஓர் நாள்.

வசந்தராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan