பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கடந்து வந்த பாதையில் ….
நிறைதமிழில் நித்திலமாய் மலர்ந்திட்ட வனப்பு
நிதமுமாய் தமிழ்மொழியில் உருவாக்கச் சிறப்பு
வளம்சேர்க்கும் வற்றாத சுரங்கமாய் மிளிர்வு
வலம் வந்த நிறைவதே இலண்டன்தமிழ் வானொலி மிடுக்கு

அயராத ஊக்குவிப்பில் அர்ப்பணமே கொடையாய்
ஆக்குதிறன் வளர்ச்சியிலே உருவாக்கம் மடையாய்
எழுத்தாக்கம் படைப்பாக்கம் தொகுப்பாக்கம் தொடராய்
தொடர்வடமாய் தொண்டாற்றும் படைப்பாளர் மிகையாய்

கடந்து வந்தபாதைக்கு சரிதமுண்டு வலுவாய்
கவிதைநேரம் இன்றாகும் எண்ணிக்கை உரமாய்
அனுதினமும் மொழிவளர்ச்சி முதலீட்டுச் சிகரம்
இளையோரும் மற்றோரும் இணைகின்ற மகுடம்
எண்ணற்ற நிகழ்வுகளின் தொகுப்புகளின் இமயம்
எண்திசையும் பாமுகத்து படைப்பாற்றல் உலவும்

யூரூப்பில் விரலசைக்கும் வியூகமே இன்று
அடுத்துவரும் தலைமுறையும்
அணிதொடரும் நன்று!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading