அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எழிலே உலகே...

உருளும் உலகே..
வளர்ச்சியின் பாதை வரலாறு
வகை வகை மாற்றத்தில் பல ஏடு
வரம்பென அணையிடும்
தொழில்நுட்பம்
வற்றாத சுரங்கத்தின் புது நுட்பம்

எத்தனை அருவிகள் இணைந்தோடும்
இணையத்தின் சமுத்திரம் சான்றாகும்
இனிவரும் காலத்தின் இணைவிற்குள்
மனிதத்தின் செயல்நிலை குறைவாகும்
இயக்கமே இயந்திரமயமாகும்
வியக்கும் புரட்சியின் எழில் உலகே
விந்தை நிறைந்தெழும் உன் மகிழ்வில்
மொழிவளப் புரட்சியும் பேரழகே
முழுமை உலகையும்
ஒர்குடைக்குள்
நிலைத்துயர் பேறே பெரும் வளமே.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading