வசந்தா ஜெகதீசன்

எழிலே உலகே...

உருளும் உலகே..
வளர்ச்சியின் பாதை வரலாறு
வகை வகை மாற்றத்தில் பல ஏடு
வரம்பென அணையிடும்
தொழில்நுட்பம்
வற்றாத சுரங்கத்தின் புது நுட்பம்

எத்தனை அருவிகள் இணைந்தோடும்
இணையத்தின் சமுத்திரம் சான்றாகும்
இனிவரும் காலத்தின் இணைவிற்குள்
மனிதத்தின் செயல்நிலை குறைவாகும்
இயக்கமே இயந்திரமயமாகும்
வியக்கும் புரட்சியின் எழில் உலகே
விந்தை நிறைந்தெழும் உன் மகிழ்வில்
மொழிவளப் புரட்சியும் பேரழகே
முழுமை உலகையும்
ஒர்குடைக்குள்
நிலைத்துயர் பேறே பெரும் வளமே.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading