வசந்தா ஜெகதீசன்

பணமே பலதாய்...

பணமே பலதாய்…
உலகையே உருட்டும் உயர்ந்த சக்தி
உழைக்கும் வாழ்வில் மிகுந்த வெற்றி
பணத்தால் பலதை செய்யும் யுக்தி
பலரை வசமாய் ஆக்கும் சித்தி

எதிலும் இயல்புற இணைந்தே ஓடும்
இல்லார் வாழ்வில் இம்சை கூடும்
மளிகை முதலாய் மாடங்கள் வரையாய்
தகுதி நிலையாய் தரத்தில் சொகுசாய்
வலையின் பின்னல் வகுத்த கணிதம்
அணியாய் திரண்டு அசலும் நகலுமாய்
ஆட்படும் வேளை அல்லற்படுத்தும்
கறுப்பு வெள்ளையாய் காசும் மாறும்
பதுக்கல் பணமாய் பலரிடம் தங்கும்
உழைக்கும் வர்க்கம் ஒரினமாகும்
ஒருநாள் கூலியும் உன்வசமாகும்
முதலாளி வர்க்கமே முதன்மை பேசும்
பணமே பலதை பாகுபடுத்தும்
எதற்கும் பணமே ஏற்றத்தின் வலிமை
இல்லாது போயின் இருக்காது செழுமை.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading