வசந்தா ஜெகதீசன்

பணி…
பணிவே பண்பின் மூலதனம்
பணிதல் அன்பின் அடையாளம்
மொழிக்கே உள்ள முதலீடு
பெரியோர் பணிதல் பெரும்பேறு

உளமாய் பணிதல் உளப்பேறு
வரமாய் பலபணி வாய்ப்பாகும்
பணி செய்து வாழ்தல் தொண்டாகும்
பலரின் வாழ்வே தொடராகும்
அரும்பணியாற்றும் அகல்விளக்காய்
அர்ப்பணப் பொழுதின் ஒளிவிளக்காய்
எத்தனை பணிகள் எமக்காக
என்றும் வழி தரும் விளக்காக
சுற்றும் புவிக்குள் சுடரிடுமே
சுழலும் வாழ்வாய் புடமிடுமே
ஒய்வே அற்ற கடிகாரம்
உலகை உணர்த்தும் உபகாரம். நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading