வசந்தா ஜெகதீசன்

அத்தாட்சி அழகிடுமே…
உருவத்தின் உயிர்ப்பு
உலகிற்கு விரிப்பு
பழமையை புதுமையை
பாதுகாப்பென உரைத்து
எதற்குமே அத்தாட்சி
எத்தனை காட்சி
திரும்பியே பார்த்திட
வியப்பினை விதைக்கும்
புகைப்பட அழகே
புதுமையின் உலகு
எத்தனை மாற்றம்
எண்ணற்ற கோலம்
கறுப்பு வெள்ளையாய்
காசினி உதயம்
எண்ணற்ற வர்ணத்தில்
ஏற்றமாய் உலவும்
அனுதினம் உனக்குள்
அடைக்கலம் அவனி
ஆதாரப் பதிவாய்
ஆள்வதே தகுதி
விநாடிக்கு விநாடி
தகவலின் திரட்டு
விந்தை திறனில்
வியாப்பிக்கும் பதிவு.
நன்றி
மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan