வசந்தா ஜெகதீசன்

எதிர்காலம் எதற்குள்….
தொழில்நுட்பம் வளர்ந்திட தொன்மை குன்றுது
அண்மைக் காலமாய் அதிகமாய் மாறுது
அவரவர் வாழ்வில் அவசர ஒட்டம்
உறவும் பற்றும் உயிர்ப்பற்ற தோற்றம்
எதிலுமே பிடிப்பற்ற காலத்தின் சுழற்சி
எங்கே தான் போகுமோ எதிர்காலப் புரட்சி
பசுமையாய் உலகு வெறுமையாய் மனது
பயிர்களில் செயற்கை உரத்திலே உணவு
கரிசனை குன்றுது காலமும் நகருது
நோய்களும் வளருது மருத்துவம் ஆளுது
மனிதமே எங்கே மறுமலர்ச்சியின் சுவடு
விடியலா இருளா விந்தை நிறைக்குது
எதிர்கால ஏற்றம் எதற்குச் சான்று
உலகை வெல்வது மனிதமா இணையமா.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading