வசந்தா ஜெகதீசன்

வளர்ந்த குழந்தைகள் தாமே…
பருவ எழில் வனப்பில்
பாதைகளின் சரிவில்
பயணிக்கும் மாற்றம்
பயன் நிறைக்கும் ஏற்றம்
படிப்படியாய் முனைந்து
அகத்தின் ஆற்றல் புனைந்து
துணிந்து எழத் தூணாய்
தாங்கும் அகம் தரும்
தன்னம்பிக்கைப் பலமே!
முடியுமென முனைய
அர்ப்பணங்கள் பலதை
ஆக்கி நிற்கும் பலரின்
சேவைநலம் பெரிதே!
செயல்த் திறன்கள் அரிதே!
நாளும் அவர் வாழ தவப்பொழுதும் தானமென
தாங்கும் வரம் உயர்வே!
தாங்கும் வரம் உயர்வே!
சினமதனை சிதைத்து சிரிப்பின் வலு நிறைத்து
வளர்க்கும் விதம் நிறைவே!
உளமதனை உரமாய் உயர்நிலை காண அனுதினமும்
அவர்கள் அம்புலியாய் ஒளிர
மனக்கதவை மாளிகையாய்
திறந்திருக்கும் மனிதநேயநிலை உலகே!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading