காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வளர்ந்த குழந்தைகள் தாமே…
பருவ எழில் வனப்பில்
பாதைகளின் சரிவில்
பயணிக்கும் மாற்றம்
பயன் நிறைக்கும் ஏற்றம்
படிப்படியாய் முனைந்து
அகத்தின் ஆற்றல் புனைந்து
துணிந்து எழத் தூணாய்
தாங்கும் அகம் தரும்
தன்னம்பிக்கைப் பலமே!
முடியுமென முனைய
அர்ப்பணங்கள் பலதை
ஆக்கி நிற்கும் பலரின்
சேவைநலம் பெரிதே!
செயல்த் திறன்கள் அரிதே!
நாளும் அவர் வாழ தவப்பொழுதும் தானமென
தாங்கும் வரம் உயர்வே!
தாங்கும் வரம் உயர்வே!
சினமதனை சிதைத்து சிரிப்பின் வலு நிறைத்து
வளர்க்கும் விதம் நிறைவே!
உளமதனை உரமாய் உயர்நிலை காண அனுதினமும்
அவர்கள் அம்புலியாய் ஒளிர
மனக்கதவை மாளிகையாய்
திறந்திருக்கும் மனிதநேயநிலை உலகே!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading