சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வெறுமை போக்கும் பசுமை…
தரணி விரிப்பாய் பசுமை
தாங்கும் உயிர்களின் உடமை
உலகைக் காக்கும் உயிர்ப்பு
அழகுக் கோல வனப்பு

அழித்தல் நிறைந்தால் அவலம்
இயற்கை வளமே குன்றும்
இல்லாதொழியும் பசுமை
வெறுமை படரும் நிலமை

மனிதம் செய்த மடமை
மாசுபடுமே சூழல்
மரங்கள் அழிப்பு கொடுமை
மண்ணின் அரிப்பு தொடரும்
கடலே நிலத்தை நிறைக்கும்
மழையின் வளமும் குன்றும்
பசுமை மெல்லக் கரைந்து
பயிர்கள் வளமும் அழிந்து
வெறுமை உலகை வெல்லும்
வெந்தணலில் அகமே வேகும்.

பசுமை விரும்பும் உயர்வே
பாரைக் காக்கும் திண்ணம்
மரங்கள் நாட்டி வளர்ப்போம்
மாற்றும் உலகே ஜெயிக்கும்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading