வசந்தா ஜெகதீசன்

முள்ளிவாய்க்கால்…
வெட்டவெளி மையானம்
வெறுமையான சுடுகாடு
அவலக் குரலொலிகள்
நிஜமான இனஅழிப்பு
நிர்க்கதியாய் தமிழினம்
பூண்டோடு அழித்திட்ட மே பதினெட்டு
இதயரணம் காயாது
மரணித்த வேதனையில்
மாண்டு துடிக்கிறது
மனிதநேயக்கதவுகள்
இருண்ட பேரவலம்
மயான பூமியாய்
முள்ளிவாய்க்கால்
மறக்கத்தகுமா மே பதினெட்டு
ஈழத்தின் வேரிலே
இனஅழிப்புக்கோரம்
குருதி ரணமாய்
குற்றுயிர் வதையாய்
கட்டுண்டு மாண்ட
காயவலிகள்
மறக்கத்தகுமா மே18
மனிதமே எங்கே
மாண்டுபோனாய்.
குமுறும் அலையாய்
கொன்று குவித்தார்
எழுகை பெற்றிட ஏது வழி
அவலம் குன்றி அகலும் வலி!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading