அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

என்று தீருமோ…
நினைவுகளாய் நிரம்பி
நித்தம் அலை மோதி
நிதர்சனத்தை தேடும்
உறவுகளின் தாகம்
உருக்குலையும் தேசம்
ஏங்குகின்ற மனதே
என்றாகும் தீர்வு
எதுவாகும் வாழ்வு
காணாமல் ஏங்கும்
கண்களுக்குள் ஈரம்
கவலை நிலைத் தேக்கம்
நொந்து தினம் வாடும்
கொந்தளிப்பில் காலம்
என்றாகும் தீர்வு
எதுவாகும் வாழ்வு
உறவுகளின் உராய்வில்
உறங்காத அலையாய்
தணியாத தாகம்
தவிர்க்க ஏது வழியோ
தளராது நிமிர்வோம்
தாங்கிக் துயர் களைவோம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading