பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

என்று தீருமோ…
நினைவுகளாய் நிரம்பி
நித்தம் அலை மோதி
நிதர்சனத்தை தேடும்
உறவுகளின் தாகம்
உருக்குலையும் தேசம்
ஏங்குகின்ற மனதே
என்றாகும் தீர்வு
எதுவாகும் வாழ்வு
காணாமல் ஏங்கும்
கண்களுக்குள் ஈரம்
கவலை நிலைத் தேக்கம்
நொந்து தினம் வாடும்
கொந்தளிப்பில் காலம்
என்றாகும் தீர்வு
எதுவாகும் வாழ்வு
உறவுகளின் உராய்வில்
உறங்காத அலையாய்
தணியாத தாகம்
தவிர்க்க ஏது வழியோ
தளராது நிமிர்வோம்
தாங்கிக் துயர் களைவோம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan