இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எழுத்தறிவு இல்லையெனில்…
கல்வியெனும் விளக்கொளிக்கு
திரியாகி ஒளிர்வது
கருத்துக்களை பரிமாறும் மொழியாகி மிளிர்வது
எழுத்தென்னும் ஊற்றே
எதற்கும் முதன்மை உரித்தே

உரிமைக்கு உறுதியாய்
கையெழுத்து சாட்சியாய்
கல்விக்கு ஏடாகி
கருத்துரைக்கும் சாட்சியது
எழுத்தறிவே பல்திறனாய்
எமக்குதவும் அரிச்சுவடி

இல்லையெனில். மொழியேது
இடர்கூறும் வழியேது
இனமென்னும் கூறுகளும்
ஈடி இணையில்லாத பாசத்தின்
பரிவுகளும்
பரிமாற்றமில்லாமல் மெளனத்தை மகுடமிட்டு
நலிந்தே நசுங்கிடுமே

மொழிக்கே மூலதனம்
முன்னுரைப்பின் அவதானம்
எழுத்தறிவே வரம்பாகும்
எல்லைகளைத் தாண்டும்
எங்கும் எம்மை இனம் காட்டும்
எதிலுமே ஏற்றத்தை வழிகாட்டும்
ஆசானின் அரவணைப்பு
பெற்றோரின் பேரிணைப்பு
கற்றோராய் கடலறிவு பெற்றோராய்
உலகறிவில் உயர்வாக்கும்
உயிர்ப்பின் உன்னதர்கள்
உருவாக்கும் ஆசான்கள்!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading