பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எழுத்தறிவு இல்லையெனில்…
கல்வியெனும் விளக்கொளிக்கு
திரியாகி ஒளிர்வது
கருத்துக்களை பரிமாறும் மொழியாகி மிளிர்வது
எழுத்தென்னும் ஊற்றே
எதற்கும் முதன்மை உரித்தே

உரிமைக்கு உறுதியாய்
கையெழுத்து சாட்சியாய்
கல்விக்கு ஏடாகி
கருத்துரைக்கும் சாட்சியது
எழுத்தறிவே பல்திறனாய்
எமக்குதவும் அரிச்சுவடி

இல்லையெனில். மொழியேது
இடர்கூறும் வழியேது
இனமென்னும் கூறுகளும்
ஈடி இணையில்லாத பாசத்தின்
பரிவுகளும்
பரிமாற்றமில்லாமல் மெளனத்தை மகுடமிட்டு
நலிந்தே நசுங்கிடுமே

மொழிக்கே மூலதனம்
முன்னுரைப்பின் அவதானம்
எழுத்தறிவே வரம்பாகும்
எல்லைகளைத் தாண்டும்
எங்கும் எம்மை இனம் காட்டும்
எதிலுமே ஏற்றத்தை வழிகாட்டும்
ஆசானின் அரவணைப்பு
பெற்றோரின் பேரிணைப்பு
கற்றோராய் கடலறிவு பெற்றோராய்
உலகறிவில் உயர்வாக்கும்
உயிர்ப்பின் உன்னதர்கள்
உருவாக்கும் ஆசான்கள்!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan