பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தியாகமே தீர்ப்பானதா?
அன்னை தேசத்து அண்ணல் காந்தி
அகிம்சை வழியின் போரினவாதி
உண்ணா நோன்பின் உலகப்படிமம்
உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம்

பிரகாச ஒளியின் பிம்பச் சுடரே
எமக்கென ஏற்றிய தியாக தீபம்
மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம்
கண்ணின் திரையில் கடலெனப் பொங்கும்

மண்ணின் மைந்தா அகிம்சை வேந்தா
ஈரறு தினத்தின் ஈகைச்சுடரே
ஈழவேரின் வேட்கைத் தீயே
ஆகுதியானாய் அன்னை மண்ணில்

அகிம்சைப் போரில் உரிமை பூண்டாய்
அண்ணல் தீலிபனே ஆகுதி மைந்தனே
தியாகமே உமக்குத் தீர்ப்பானதா
தாயக மீட்பின் தாகமாய் தாங்கி
தமிழுக்கு உயிரை ஈர்த்திட்ட வள்ளல்
ஈராறு தினங்கள் இலக்கில் வென்றாய்
வீரத்தின் வேட்கை வெற்றியாய்
சுமந்து
காலத்தில் எமக்கு கலங்கரை நீவிர்
ஞாலத்தில் தியாகமே தீர்ப்பான
வேள்வி
அகிம்சைப் போரின் ஆகுதி ஞானி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan