ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
குழலோசை….
உலகின் வரமாய்
உயிர்ப்பின் ஒலியாய்
அகிலம் ஆளும் குழலின் ஒசை
மழலை மொழியில்
மனதின் ஈர்ப்பில்
ரசனை பெருக்கும்
குழலின் ஒசை

இசையாய் நாதம்
இயல்பில் ஒன்ற
மழையாய் சாரல்
மண்ணில் வீழும்
பசுமைப் படர்வில்
மூங்கில் இசையில்
குழலின் ஒசை
வருடும் தென்றல்
அசையும் புவிக்குள்
அனைத்தும் வசமே
குழலின் ஓசை
இசையின் இனமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading