வசந்தா ஜெகதீசன்

உயிர்நேயம்…..
மனிதத்தின் நேயமே மாண்புறு வாழ்வு
அகிலத்தை ஆளும் ஆற்றலின்
தோப்பு
அழிவுகள் கண்டு குமுறிடும் நெஞ்சம்
அநீதியின் தீர்வில் கொதித்திடும் உள்ளம்
சேவையின் செதுக்கலில் செம்மையுறும்
உதவிடும் நியதியில் உறுதுணை வரமாய்
காலத்தின் கணதியை கரைத்திடும் பலமாய்
மனிதத்தைப் பேணும் மனதின் உராய்வே
உயிரின் நேயமாய் உணர்வை வருடும்
தினமும் தேவையைத் தேடி உதவும்
நலிவின் சிதைவை நசுங்கி விலத்தும்
நம்பிக்கை நாணயம் வலுப்பெறும் வரம்பே
மனித நேயத்தின் மதியின் கடலே
உளமே ஊற்றாய் ஐக்கியம் பேணும்
உதவும் அகமே ஒளிர்வாய் ஒளிரும்
மனிதவலுவே மாற்றத்தின் திடல்
ஆற்றும் தொண்டே அளப்பெரிது
அகத்தால் ஒன்றுதல் அகிலத்துலகு
உயிரின் நேயமே உலகில் பெரிது.
நன்றி
மிக்கநன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading