” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பள்ளிக்காலம்….
பருவங்கள் பலதாய்
பள்ளிக்காலம் முதலாய்
பழகிய பண்புகள் உயர்வாய்
படருதே வாழ்வாய்
அழகிய கோலம்
அழித்து அழித்து “அ” எழுதிய
காலம்
வரைமுறையற்ற வாழ்க்கைப் பாடம்
வரமாய் கிட்டிய கல்வியின் சாரம்

சுமையே அற்று சுதந்திர உலகில்
பறவைகள் போல பாடிப் பறந்தோம்
உயர்வுகள் கிட்ட உலகையே மறந்தோம்
அன்பில் நட்பு ஆட்சியில் வானம்
எல்லைகளற்ற பள்ளியின் காலம்
இனிதே மலர்ந்த வாழ்வின் வசந்தம்
இனியும் வருமா இந்த இளவேனில் காலம்!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan