” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு…
வழி தொலைத்து விழி தொலைத்து
வறுமைநிலை சூழ்ந்திருக்கும்
வெறுமை வாழ்வில் ஒளியெங்கு!

வரட்சி நிலம் பாலைவனம்
வரண்ட அன்பில் ஏது இனம்
புரட்சி செய்த போர்ச்சூழல்
பூத்துநிலம் பசுமைபெற ஒளியெங்கு!

தாழ்வுநிலை மனிதநேயம்
தளர்ந்து போன வாழ்வின் உரம்
உதவும் நிலை உதாசீனம்
உறவுகளின் வேற்றுமையில் ஒளியெங்கு!

அறிவியலின் ஆட்சிநிலை
தொழில்நுட்ப வளர்ச்சிநிலை
தொடர்பாடல் குன்றும் வழி
தொலைந்து போகும் வேறுபாட்டில் ஒளியெங்கு!

ஒளிக்கோலம் வழிகாட்ட
வழித்தீபம் சுடரேற்ற
அரணாகும் அகிலத்தின்
ஒளியாலே ஒளியேற்று
உலகையே வசமாக்கு!

அகமெங்கும் ஒளியாகி
அகிலமே ஒளிர்வாகி
ஓங்குபுகழ் மண்வீரம்
ஒற்றுமையில் ஓர்தீபம்
ஏற்றுகிறோம் ஒளியாகி ஒளிர்வாகுமே!

நன்றி மிக்க நன்றி

நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan