சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சந்தம் சிந்தும் கவி..
பேரன்பின் கூடமிது
பிரியமான பாசமிது
அன்பாலே ஆளும்
அரவணைத்துப் பேசும்
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்த மாடம்
எண்மராய் நாங்கள் வாழ்ந்திருந்த கூடம்
பாசத்தின் பறவைகளாய்
பட்டாம் பூச்சிகளாய்
சுற்றி வந்த மனையே
சொந்தங்கள் கூடிடுமே
சொர்க்கமாய் மாறிடுமே
சின்னச் சின்ன சேட்டைகளில்
சிறகடித்து மகிழ்வோம்
முற்றமதில் விளையாட்டு
முழுநிலாவில் கூட்டாஞ் சோறு
கூட்டுறவின் பொற்காலம்
உடன்பிறப்புக்களின் வாழ்காலம்
வருமா இனிமேலும்
வசந்ததின் பிறந்த மனை
வற்றாத அன்பின் இணை!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading