பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எச்சம்…
வரையறை அற்றது வாழ்வின் எச்சம்
வரைமுறை உடையது வாக்கிய எச்சம்
நடைமுறை வாழ்வில்
நாம் கண்ட எச்சம்
நாளாந்தப் போரின்
விழுமிய மிச்சம்
துடிக்கும் உயிர்களும்
துண்டித்த தலைகளும்
வீழ்ந்தே மடிந்திட்ட மனிதத்தின் வதைகள்
மலிந்தே போனதே மனிதத்தின் தகமை
இழந்தே போனோம்
எண்ணற்ற உயிர்கள்
ஈடிணையற்ற இழப்பின் வலிமை
ஏங்கிய தவித்திடும்
உறவுகள் நிலமை
எச்சமாய் மிஞ்சிய அவலத்தின் அனர்த்தம்
இடரென வாட்டுதே மன அழுத்தத்தின் உச்சம்
வெந்தே மடிந்திட்ட வீரரின் கனவு
எச்சத்தின் வாழ்வில் எழுகை பெறுமா
எதிர்காலத்தின் நிமிர்வில் தமிழாய் எழுமா.
நன்றி

மிக்க நன்றி பாவை அண்ணாவுக்கும்இணைத்தொகுப்பாளர் அரும்பணி ஆற்றலுக்கும்.. மிக்க மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading