சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எச்சம்…
வரையறை அற்றது வாழ்வின் எச்சம்
வரைமுறை உடையது வாக்கிய எச்சம்
நடைமுறை வாழ்வில்
நாம் கண்ட எச்சம்
நாளாந்தப் போரின்
விழுமிய மிச்சம்
துடிக்கும் உயிர்களும்
துண்டித்த தலைகளும்
வீழ்ந்தே மடிந்திட்ட மனிதத்தின் வதைகள்
மலிந்தே போனதே மனிதத்தின் தகமை
இழந்தே போனோம்
எண்ணற்ற உயிர்கள்
ஈடிணையற்ற இழப்பின் வலிமை
ஏங்கிய தவித்திடும்
உறவுகள் நிலமை
எச்சமாய் மிஞ்சிய அவலத்தின் அனர்த்தம்
இடரென வாட்டுதே மன அழுத்தத்தின் உச்சம்
வெந்தே மடிந்திட்ட வீரரின் கனவு
எச்சத்தின் வாழ்வில் எழுகை பெறுமா
எதிர்காலத்தின் நிமிர்வில் தமிழாய் எழுமா.
நன்றி

மிக்க நன்றி பாவை அண்ணாவுக்கும்இணைத்தொகுப்பாளர் அரும்பணி ஆற்றலுக்கும்.. மிக்க மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading