இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சுழியம்….
சுழித்தே தான் போடுகின்ற சுழியத்தின் வனப்பில்
சுழல்கிறது புவியென்ற ராச்சியத்தின் பிணைப்பு
தனி நின்று தன் பொருளை தந்திடாத போதும்
துணைநின்று பெறுமதியை தூக்கி வைக்கும்-ஓன்று

எதுவெனினும் வெறுமை என ஓதுக்கிடுதல் பகமை
எமக்குள்ளும் உட்பொருளாய் ஆயிரமாய்த் தகமை
சருகென்று வீதியில் நிறைந்திருக்கும் இலைகள்
பாருக்கு பசுமை தன்னை பகிர்ந்தளித்த கொடையே

திறமைக்கும் வீழ்ச்சி உண்டு திரும்பவும் எழவே
தகமைக்கும் தடைகள் உண்டு தைரியத்தைப் பெறவே
நிமிர்விற்குள் நிறைய உண்டு நீள் கனவுத் தொடரே
ஓன்றுக்கும் உயர்வு தரும் ஒரு சுழிய இணைவே

அது போல வாழ்வோமே வாழ்க்கை என்ற கடலை
வற்றாது தேக்கிடுவோம் நம்பிக்கையின் வேரை
வளர்ந்தோங்கும் வலதுபுறத்துச் சுழியம் போல் நிமிர்வு.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading