இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வன்னிக்கவி லக்சன்… இலங்கை.

*தமிழ் மொழி*

உணர்வில் கலந்த மொழி.
உலகில் நிலைத்த மொழி.
மொழிகளிற்கு தலையான மொழி.
தமிழனிற்கு தாயான மொழி.
சொல்,ஓசை நயம் கொள் மொழி.
வானாண்டவர் நாவின் சொல் மொழி.
இலக்கியங்களை மழையாய் பொழிந்த மொழி.
எப்போதும் என் மதியில் கலந்த மொழி.
தரணியெங்கும் பேசும் மொழி.
புவி முதலில் உணர்ந்த மொழி
என் நாவின் சுவை
மொழி
இன் பாரின் முதல் மொழி
தாயின் கருவறையில் கேட்ட முதல் மொழி
சேயாயிருக்கையில் வாயாற சொன்ன மொழி
வளர்ந்த போது நெஞ்சார சொன்ன மொழி
மாணவனாய் உள்ள போது கல்வி தந்த மொழி
கவிஞனாய் உள்ள போது வரிதந்த மொழி
என் தொப்பிள் கொடி உறவான ‘தமிழ் மொழி

-வன்னிக்கவி லக்சன்…
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading