வறுமைக் கோட்டின் வரம்புகள்

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வாழும் வயதிலே வதங்கும் நிலையும்
வறுமைக் கோட்டின் வரம்புகள் உயரவும்
வளத்தை தேடும் சித்திரம் அங்கு
தளத்தை உயர்வாக்கவும் தளராத துணிவுடன்
விளையும் பயிரில் முளையும் திறனாய்
அலையும் மனதில் ஆளுமையும் சேரவும்
நிலையாய் முன்னேற்றம் நிம்மதியை தருமே
நித்திலம் கவலையும் சூழ்ந்த போதிலும்
வைத்திடும் எண்ணத்தில் வரையவும் நினைத்து
புத்தியின் முயற்சி புதுமையும் படைக்கும்
ஏக்கம் தாக்கம் இயம்பிடத் தோன்றினாலும்
ஊக்கமும் உயர்வும் வருமென நம்பிக்கை

சிவருபன் சர்வேஸ்வரி

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading