தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வாழும் வயதிலே வதங்கும் நிலையும்
வறுமைக் கோட்டின் வரம்புகள் உயரவும்
வளத்தை தேடும் சித்திரம் அங்கு
தளத்தை உயர்வாக்கவும் தளராத துணிவுடன்
விளையும் பயிரில் முளையும் திறனாய்
அலையும் மனதில் ஆளுமையும் சேரவும்
நிலையாய் முன்னேற்றம் நிம்மதியை தருமே
நித்திலம் கவலையும் சூழ்ந்த போதிலும்
வைத்திடும் எண்ணத்தில் வரையவும் நினைத்து
புத்தியின் முயற்சி புதுமையும் படைக்கும்
ஏக்கம் தாக்கம் இயம்பிடத் தோன்றினாலும்
ஊக்கமும் உயர்வும் வருமென நம்பிக்கை

சிவருபன் சர்வேஸ்வரி

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading