நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வாழும் வயதிலே வதங்கும் நிலையும்
வறுமைக் கோட்டின் வரம்புகள் உயரவும்
வளத்தை தேடும் சித்திரம் அங்கு
தளத்தை உயர்வாக்கவும் தளராத துணிவுடன்
விளையும் பயிரில் முளையும் திறனாய்
அலையும் மனதில் ஆளுமையும் சேரவும்
நிலையாய் முன்னேற்றம் நிம்மதியை தருமே
நித்திலம் கவலையும் சூழ்ந்த போதிலும்
வைத்திடும் எண்ணத்தில் வரையவும் நினைத்து
புத்தியின் முயற்சி புதுமையும் படைக்கும்
ஏக்கம் தாக்கம் இயம்பிடத் தோன்றினாலும்
ஊக்கமும் உயர்வும் வருமென நம்பிக்கை

சிவருபன் சர்வேஸ்வரி