வலியோ முதுமை

வலியோ முதுமை

கெலியோ பிறப்பில் இளமை
வலியோ இறப்பின் முதுமை
பலியோ சலிப்பில் பழமை

கூலியோ அன்றைய இனிமை
காலியோ முதிர்வின்
தனிமை
சோலியோ வயோதிப பதுமை

உற்றார் உறவினரன்றி
சிறகொடிந்த வேதனை
வேலி
பற்றறிந்த போதனை
வேதாந்த சீதனம் ஜாலி

மனதில் பிரிவின்
ஆதிக்கம்
கனமான உயிரைப்
பாதிக்க தினந்தினம்
இரவு பகல் சோதிக்க
பலியின் வலியோ முதுமை.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading