அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

“வலி கொண்ட தேசம்

நேவிஸ் பிலிப் கவி இல(534)

சிறு மழைத்துளியும்
அசைந்தாடும் தென்றலும்
சங்கமித்து சங்கீதம் பாடும்
சிங்காரச் சோலை

வனப்பான தேசம் இன்று
வளமிளந்து போனதே
வசந்த நிலமெல்லாம்
வெள்ளக் காடாயானதே

கொட்டும் மழையும் சூறாவளியும்
சுழன்றடிக்க ஆறுகள் குளங்கள்
மதகுடைத்து கரை புரண்டோட
வைகுண்ட பயணங்கள்
வழிஎங்கும் தொடர

தலைமுறை காணா
கொலைக்களமென
மணல் மேடின் சரிவில்
உடலங்கள் புதையுது

இது இயற்கை சூழலின் மாற்றமா?
மனிதனின் சுய நல ஏற்றமா ?
இருந்தும் மனித நேயம் மடியவில்லை
உதவிக்கரம்நீட்டும் மனிதத்தில்
காண்கின்றோம். மனித மாண்பை நன்றி……..

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading