” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

வாழ்வில் கலையும் தொடரா நிலையும்..

சிவதர்சனி இரா

வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்..!!

மண்வளம் காக்கும் கலை
மன நலம் போற்றும் நிலை
உயிரில் உணர்வில் கலக்கும்
உறவாகி உயிர்ப்பாகி நிறையும்..

பாட்டும் நடனமும் பலகலை
பண்பட்ட வாழ்வின் உயிர் நிலை
புண்பட்ட மனத்தினை ஆற்றுப்படுத்த
புகழாரம் சூடும் கலையதுவே..

இசைந்து வாழத்தலைப்படும்
இறைவன் விருப்பை உறவாக்கும்
நிறைந்தே மந்னிடம் வாழ்வேற்ற
நித்திய மகிழ்வே கலையாகும்..

இளமை மனத்தில் பதியமாகி
முதுமை வரைத் துணையாகி
வறுமை போக்கும் வரமாகி
வல்லமை கூட்டும் கலையதுவே..

புலம்பெயர் தேசத்தில் நின்றே
புலமை விலக்கி போட்டி ஈன்று
புகழுக்கும் பெருமைக்கும் துணை
புலன் இழந்து புரியா நிலை..

பணத்தினை வாரி இறைத்தும்
பலமணி நேரம் இழந்தும்
சந்ததி விலக்கியே வாழ்ந்திடுதே
கலை தொடரா நிலையதுவே..
சிவதர்சனி இராகவன்
6/2/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading