விவசாயம்

சிவருபன் சர்வேஸ்வரி

விவசாயம்..

பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//

தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//

காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//

வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//

ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //

வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி

போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //

தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //

காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//

களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_

சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//

சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading