ஷர்ளா தரன்

விருப்பத்தில் ஒரு தலைப்பு
விரும்பி எழுத ஒரு வாய்ப்பு
கரும்பாய் கவிதை ஒன்று வடிக்க
காலத்தை கணக்கிட்டு காத்திருந்தேன்

வேலைப்பழு வேகம் கொடுத்ததால்
காலக்கணக்கு தப்பாயிற்று
கவிதைக்கான நேரமோ
கரையை தொட்டுவிட்டது
கனிந்திருக்க வேண்டிய கரும்பு
வெதும்பி நிற்குது் என்
விருப்பு கவியாய்…..
விரும்பி் எழுத முடியாமல்

திரிந்து திரிந்து களைத்த
என் கால்கள்
ஓய்ந்து ஒரு சில மணிநேரம் இருக்க
பாய்ந்து ஓடி வந்து
பாமுகம் பார்க்கும் நேரமிது
பல வகை கவி கேட்கும் தருணமிது

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

    Continue reading