ஷாமினி துவாரகன்

அழைக்கின்றேன் மகளை
கோவில் சென்று வர
கேட்கிறாள் காரணம்
எதற்கு தான் என்று…..

சூரவதை பார்க்க
சீக்கிரம் கிளம்பு
பாணக்கம் வாங்கி வர
பாத்திரமும் எடு…….

தேவர் குலம் காத்த
வேலன் புகழ் எல்லாம்
பாட்டி சொல்லக் கேட்டதுண்டு
பார்க்க வேண்டும் நேரிலதை ……

பட்டு பாவாடை உடன்
சாந்துப் பொட்டும் வைத்து
பின்னிய சடையிடை
மல்லிகைப் பூவும் வைத்து ……

சட்டென்று வந்து நின்ற
செல்லமகள் முகம் பார்த்து
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன் .

அசுரனை அழித்த
அந்தக் கதை மட்டுமல்ல
அந்நிய நாட்டிலும்
அழியாது பேணி வரும்
கலாசாரம் எண்ணி
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன்.

-ஷாமினி துவாரகன்-
12.11.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading